Monday, October 26, 2015

KAPPARISI SADHAM | AIPPASI POURNAMI SPECIAL RECIPE

KAPPARISI SADHAM - Image Courtsey: A.Sentamil Arasu

Raw Rice – 200g
Fried Bengal Gram – 1tbsp
Coconut, grated – 2tbsp
Cashewnuts – 1 tbsp
Ghee – 50ml
Cardamom Powder – ¼ tsp
Jaggery – 150g
Water to boil the rice

Method

1. Rinse and boil the rawrice in water. Add the jaggery into the almost cooked rice. Stir it and cook it in slow fire.

2. Heat ghee in a non stick pan, add fried Bengal gram and cashewnuts. Fry it till it turns slight golden colour.

3. Add the fried items into boiled raw rice mixture, mix all well.



3. Now add coconut and cardamom powder. Combine it, finish with little ghee.

Sunday, October 25, 2015

Aviyal | Avial | How to make Aviyal

Carrot – 1nr (Medium)
Brinjal – 1nr (Medium)
Drumstick – 1nr
Potato – 1nr (Medium)
Rawbanana – ½ (Medium)
Salt to taste
Coconut oil – 2tbsp
Curd – 2tbsp
Greenchillies,slitted – 2nr
Curry leaves – a few
For making coarse masala
Coconut, grated – 1 nr
Turmeric powder – ¼ tsp
Cumin seeds – a pinch
Small onions, chopped – 2nr

Method of Preparation:

1. Cut the vegetables into finger shape. Boil the vegetables along with salt & Greenchilli in enough water. Prepare coarse mixture out of the given coarse masala ingredients in mixie.

2. Add the coarse masala into the boiled vegetables, mix and cook it in slow fire. Check the salt then add beaten curd. Stir gently to mix the curd well. Finally put coconut oil and curryleaves on top.

3. Take out from fire and serve with rice.                   


Saturday, October 24, 2015

Kaara Seeval - Ribbon Pakoda



Gram flour – 100g
Rice flour – 100g
Fried Gram flour – 1 tbsp
Salt to taste
Black Sesame seeds – ¼ tsp
Ghee – 1 tbsp
Refined Oil – to deep fry
To prepare crushed powder
Curry leaf – a few
Dry Redchilli – 2nr
Garlic cloves - 2
Cumin seeds – ¼ tsp

Method of preparation:

1.                 Dry fry the crushed powder ingredients and make it as a crushed powder.

2.        Put gram flour, rice flour, fried gram flour, salt, crushed powder, ghee and sesame seeds in a      basin. Add enough water into the flour mixture, mix it gently and prepare it as stick free dough.

3.       Keep the seeval dough into the seeval intruder, press it into the hot oil as swirling position. Deep fry it.

4.       Garnish with fried curryleaf.

Thursday, October 22, 2015

Chef Raj Mohan Quotes | Quotes by Chef Raj Mohan | Chef Quotes

Carve your Culinary skills with strong mind, take the heat, focus observation and absorption, process thoughts, continuous practice on technique, being involved: ofcourse the insight study about the backdrop of cuisine to serve the aromatic platter to your audience. Now underline the word 'Chef', you would be ignited.
                                                                                                                        -  Chef Raj Mohan

Recipe gets the mastery soul if it is cooked according to “what the mind and heart is saying, to whom the food is being served, balanced ingredients and with loads of love”...
                                                                                                                            -  Chef Raj Mohan

Tuesday, September 15, 2015

SUN TV KITCHEN GALATTA - Chef M.S.Raj Mohan

Hi Everyone, Hope you are all enjoying my web series in Food Tape - www.youtube.com/chefrajmohan. Now I am Live in popular leading Tamil Satellite Channel Sun TV for your favourite Cookery programme 'Kitchen Galatta" on every Thursday 10.30am.

Coming with new interesting recipes, Keep watching !!! Love - CRM

Chef Raj Mohan in Sun TV Kitchen Galatta

Sunday, August 30, 2015

சாரதா மெஸ் - மணக்கும் மதுரை

அசைவ உணவை உண்ண விரும்பின நான் அடுத்து தேர்ந்தெடுத்த இடம் பரபரப்பான மதுரை டவுன்ஹால் ரோட்டுல்ல மண்டையன் ஆசாரி சந்துல இருக்கிற சாரதா மெஸ்ஸ . இங்க அசைவ உணவுகள நம்ம வீட்டு சுவைல செய்வாங்கன்னு கேள்விப்பட்டேன். ஹோடேல்ன்ன நம்ம மூணு நேரம் சாப்பாடு கிடைக்கும் என்பது தான் வழக்கம்.ஆனா இங்க புதுமை என்னன்னா சாரதா மெஸ் மதியம் மட்டும் தான் திறந்து இருக்கு அதுவும் பிரியாணி, சாதம் கூட அசைவ உணவுகள மதிய நேரத்துல பரிமாறுறாங்க.

ஐம்பது வருஷம்  பழைமையான சாரதா மெஸ்ல மதுரைக்கு பெயர் போன அயிரை மீன் குழம்பு, வீரால் மீன் குழம்பு, சுக்கா, கோல உருண்டை, மட்டன் குழம்பு இங்க படு பிரபலம்.அப்படியே மெனு கார்டு பாத்துட்டு எந்த வகை உணவுகள்ள  சாப்பிடலாம்னு இருந்த எனக்கு சாரதா மெஸ்ஸ நிர்வாகிச்சுட்டு இருக்கிற தனசேகர், அம்சராஜன் எனக்கு உதவுனாங்க. ஆர்டர் பண்ணின உணவுகள் வரத்துக்குள்ள தனசேகர், அம்சராஜன் சாரதா மெஸ் பத்தின சுவராஸ்ஸயமான விஷயங்களை பகிர்ந்துகிட்டாங்க. சாரதா மெஸ் ஓட ஸ்பெஷல் அயிரை மீன் குழம்பு தான். சாரதா மெஸ் ஆரம்பிச்சதே தற்செயலா நடந்த ஒன்னு, சாரதா மெஸ்ஸ தொடங்கின்ன திரு.லிங்கம் அவங்களோட மனைவி வைக்கிற அயிரை மீன் குழம்ப பிரதானபடுத்தி ஆரம்பிச்ச கடை தான் இந்த சாரதா மெஸ். ஆரம்ப காலத்துல இந்த  கடைய மண்  பணை சமையல் கடைன்னு சொல்லுவாங்க, பின்ன காலபோக்கிலா மாறிடுச்சு. எங்களுக்கான வாடிக்கையாளர்கள் நிறைய இருக்காங்க, மதியம் 11.30 மணில இருந்து மாலை 4.30 மணி வரை சாதம், பிரியாணி கூட அசைவ உணவு வகைகளை பரிமாறுறோம். சாதத்தோட கூட்டு, பொரியல், சம்பார், ரசம் எல்லாம் வைக்கிறோம்.

அயிரை, சீலா, வீரால், கெளுத்தி மீன் வகைகளை தான் எங்க கடைகளில் பிரதான மீன் குழம்பு வகைகளுக்கு பயன்படுத்துறோம். எங்களுடைய சமையல் எல்லாமே எங்க அம்மா கைப்பக்குவதுல ரெடி ஆன ரெசிப்பிங்கிறதலா இன்னும் நாங்க வீட்டு சாப்பாட்டுக்கு உண்டான சுவையே கொடுத்துட்டு இருக்குறோம். அது போல சமையல்லா சேர்க்கிற மசாலாதூள்கள் அனைத்தும் நாங்களை தயார் பண்றதால எங்களுக்கான சுவையே இன்னைக்கும் நாங்க தக்கவச்சுட்டு இருக்கோம். இப்பம் நீங்க எங்க சாப்பாட சாப்பிட்டுட்டு சுவை எப்படின்னு சொல்லுவிங்க பாருங்கன்னு சொன்னாரு அம்சராஜன்.

வாழை இலைல சாதம் அது கூட கோழி சுக்கா கறி, மட்டன் கறி குழம்பு, அயிரை மீன் குழம்பு, வீரால் மீன் குழம்பு இது எல்லாம் போதாதுன்னு இரண்டு கோல உருண்டை வேற வச்சாங்க. குழம்புல மிளகு,மல்லியோட சுவை மற்றும் மணம் நன்றாக தெரிஞ்சது. இது வீட்டுல தயாரிச்ச மசாலா என்கிறதுக்கு சாட்சி. மீன் குழம்புல தேங்காய் அரைச்சு சேர்க்கமா தேங்காய் பால் ஊத்தி செய்யறதால வண்ணம், சுவை நன்றாக இருக்கு. கம்மா, குளத்து மீன்களுக்கு உண்டான மணல் வாசனை குழம்புல இருந்தது. இங்க இன்னமும் விறகு அடுப்பு பயன்படுத்தி சமைக்கிறதல அசைவ உணவுகளின் சுவை சூப்பராக இருக்கு. சைவ சாப்பாடு 65 ரூபாய்க்கு கிடைக்குது. அசைவ விரும்பிகளுக்கு இங்கு மீன், எறால், சுக்கா, பிரியாணி, குழம்பு, சிக்கன்னு நிறைய வகைகள் இருக்கு, இது எல்லாத்தையும் 80 ருபாய்ல இருந்து 150ருபாய் குள்ள சுவைக்கலாம் என்பது கூடுதல் மகிழ்ச்சி. மட்டன் கோல உருண்டையின் விலை 10 ருபாய் தான், அதுல மசாலா பொருட்களின் சுவை நாவில் நன்றாக பட்டது. இந்த கோல உருண்டை வாயில்ல கரைய்யிற மாதிரியான உணர்வ தந்தது.  

வீட்டு சாப்பாட்டு மாதிரி இருக்கிறதல உணவில சொல்லி கொள்கிற மாதிரி காரமோ, எண்ணைய்யோ அவ்வளவாக இல்லை. அசைவ உணவுனாலே கலர் பிரதானமா இருக்கும், ஆனா இங்க கிடைக்கிற பல அசைவ உணவுகளுக்கு ஆன கலர் மசாலா பொருட்கள்ள இருந்து வந்ததாகவே தெரியுது.

சூப்பரான மதிய சாப்பாட மோரு ஊத்தி சாப்பிட்டு முடிச்சுட்டு தனசேகர் அம்சராஜன் ஓட உபசரிப்புக்கு நன்றி சொல்லிட்டு சாரதா மெஸ் விட்டு கிளம்பும் போது புரிஞ்சது காலங்கள் மாறினாலும் பழமை மாறாத உணவின் சுவையும் சாரதா மெஸ்ன் தோற்றமும்.

சாரதா மெஸ் தொடர்ப்புக்கு -  திரு.அம்சராஜன் - 9486506197

Thursday, July 2, 2015

Idiyappam | Sevai | Idiyappam Recipe | String Hoppers Recipe


Parboiled Rice (Puzhungal Arisi) – 1 ½ cup
Raw Rice (Pacha arisi) – ½ cup
Ghee or Refined Oil – 2 tbsp
Salt - a little
Coconut Gratings – ½ coconut




Method of Preparation

1.      Soak the rice items for about 4 hours in water. Rinse it well after soaking.

2.      Add little water to the soaked rice and put in to the mixie.

3.      Grind it nicely and take it out. Pour it down into the heavy bottomed vessel.

4.      Make the rice mixture into the consistency of Dosa batter. Add salt and Ghee / Oil. Mix it.

5.      Keep the vessel over the low flame and stir consistently. If you stir it for few minutes, it shall become a dough kind texture. Remove from fire. Let it to get cool down for few minutes.

6.    Apply little oil in your palm, now knead / mix the dough mixture till it become soft.

7.   Now you can place the Idiyappam dough in to Idiyappam intruder.

8.  Prepare Idiyappam one by one and put few coconut gratings over each Idiyappam. Steam the Idiyappam for 5 minutes.

9.      Now the excellent Idiyappam is ready to taste.



Monday, June 29, 2015

மதுரை பர்மா இடியாப்பம் கடை , கீழ வெளி வீதி | மணக்கும் மதுரை



சாப்பாடு என்கிற விஷயம் எல்லாருக்கும் குறைச்சபட்சம் ஆவது பிடிச்சதா தான் இருக்கணும். எதாவது ஊருக்கு நம்ம புதுசா போன இங்க சாப்பிட நல்ல கடை எங்க இருக்குன்னு கேப்போம். இந்த ஒரு வார்த்தைய வச்சுகிட்டு எந்த கடைலப்பா ருசியான உணவு கிடைக்கும்ன்னு தேடுறது நம்மிள்ள பலருக்கு வாடிக்கையானது தான். ஆமா சரி சாப்பாட்டுல ருசின்னு சொல்றங்களே அப்படின்னா என்னன்னு சிலபேர் சிலசமயங்களில் என்கிட்ட கேட்டுருக்காங்க, நான் அவங்களுக்கு சொன்ன பதில் கைமணம். இந்த கைமணம் மாறும் போது ருசி மாறும். சுவையான சமையலுக்கு தேவையான இந்த கைமணத்துல அப்படி என்ன தான் இருக்குன்னு கேட்ட நிறைய சொல்லலாம், இதுல குறிப்பிடும்படியா சொல்லணும்னா நேர்த்தி, பக்குவம், பாரம்பரியம் சேர்ந்த கலவைத்தான் கைமணம் என்கிறது. இது இருந்தா தான் ஒரு சாப்பாடு ருசிக்கும், மணக்கும் என்பது உண்மை.

எல்லா ஊரிலையும் குறிப்பிட்டு சொல்லும் படியா ஏதாவது ஒரு உணவு சாப்பிட இருக்கும், ஆனா நம்ம மதுரைய மட்டும் ஒரே ஒரு  உணவ வச்சு மட்டும் கட்டி  போட முடியாதுங்க. சங்கம் வளர்த்த மதுரையில மட்டும் தான் ஏரியாவுக்கு எரியா புதுமையான பதார்த்தங்களை தரளாமா ருசிக்கலாம். தூங்கா நகரமான மதுரைய தூங்க விடாம ஆக்குறதுல உணவின் பங்கும் உண்டுன்னு  அழகா சொல்லலாம்.

இங்குள்ள சாப்பாட்டு கடைகள் அவங்களுக்கே உண்டான ஸ்டைலில்  உணவுகளை இன்னைக்கும் பாரம்பரியம் மாறாம செஞ்சுட்டுவறாங்க, அதனால் தான் பல வருஷம் ஆயும் இந்த சாப்பாட்டு கடைகள் மக்கள் மனசுல்ல இன்னைக்கு வரைக்கும் இருப்பதுக்கான காரணம். தமிழ்நாட்டுல போய் விசேஷமான தமிழ் உணவுகள ருசிச்சு பாக்கண்ணும்னு நினைச்சுப்பாக்குற பல பேர் மனசுல தோணுற மோத ஊரு மதுரை அதை சுத்தி இருக்குற ஊருகளாத் தான் இருக்கணும், தமிழ்நாட்டுடைய பண்பாடு, கலாச்சாரம்ன்னு பலதையும்  சொன்ன நம்ம மதுரை மண்ணு சாப்பாட பத்தியும் சொல்ல மறக்கல. "மதுரைய சுத்துன கழுதை வேற எங்கயும் போகாது" என்பது ஒரு சொல். இது மதுரைல கிடைக்கக்கூடிய சாப்பாட்டுக்கும் பொருந்தும் என்பதுல சந்தேகமில்லை.

இனி வரும் நாளில எனது வலைப்பதிவுல மதுரைல நான் ருசிச்சு சாப்பிட்ட கடைகளுடைய பாரம்பரியம் பத்தின சுவாரசியங்களையும் அங்க எனக்கு கிடைச்ச புதுமையான அனுபவம், உணவுகளின் வரலாறு இது ல்லாத் தையும் உங்ககிட்ட பகிர்ந்துக்க போறேன்.

இந்த பதிவுல நான் உங்கள கூட்டிட்டு போறது இடியாப்பம் சாப்பிட. இது எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடித்தமான டிபன் பதார்த்தம். எங்க அம்மா கைப்பக்குவதுல ரெடியாவுற இடியாப்பம் நூல் மாதிரி மென்மையா விளையாட்டுதனமா சாப்பிடறதுக்கு இருக்கிறதானலேயோ என்னமோ எனக்கு சின்ன வயசுல இருந்து இடியாப்பம் மேல அவ்வளவு ஆசை. சைடு டிஷ் எதும் ரொம்ப இல்லாம நச்சுனு எளிமையா சாப்பிடக்கூடிய ஆள் தான் நம்ம இடியாப்பம். நூடுல்ஸ் தெரிஞ்ச நம்ம இளம் சந்ததிகள் கிட்ட இடியாப்பம் என்னும் ஒண்ணு மறைஞ்சு வரும் உணவாக ஆயிட்டு இருக்குது என்பது வருத்தம் தான். இடியாப்பம் மதுரைல எங்க ருசிக்கலாம்ன்னு நண்பர்கள் சில பேர் கிட்ட கேட்டப்ப அவங்க எனக்கு கைக்காட்டுன  இடம் கீழ வெளி வீதில "Christian Mission Hospital" எதிர்ல இருக்கிற பர்மா இடியாப்பம் கடையே. கீழ வெளி வீதியின் இருபக்கமும் இருக்கிற பழமை மாறாத கட்டிடங்கள  பாக்கும் போது “தென்னாட்டின் ஏதென்ஸ்னு” ஏன் மதுரைய சொல்றாங்கன்னு டக்ன்னு புரிஞ்சது எனக்கு. அப்படியே நடுந்து பர்மா இடியாப்ப கடைக்கிட்டபோகும் போது "Steamy Business" என்கிற ஆங்கில வார்த்தை கண்ணுலப் பட்டுச்சு. சின்னக் கடை தான் கடைக்குள்ள நாலு பேர் இடியாப்ப தட்டுல மின்னல் வேகத்துல இடியாப்பத்தப் பிழிஞ்சுட்டு இருந்தாங்க.

நல்ல வெள்ளை கலருல அழகா ஆவி பறக்க அடுக்கி வச்சுருக்கிற இடியாப்பத்த பாத்ததும் எனக்கு சாப்பிடணும்கிற ஆசை அதிகம் ஆச்சு. அதுக்கு முன்னாடி பர்மா இடியாப்ப கடைய பத்தின பாரம்பரியத்த தெரிஞ்சுக்காலாமேனு அங்கு பரபரப்பா வேலை செஞ்சுட்டு இருந்த பர்மா இடியாப்ப கடையோட முதலாளியம்மா தேவிகாகிட்ட பேச்சு கொடுத்தேன். தேவிகா சொன்னாங்க இது 49 வருஷம் பழைய கடை, 1966 ஆம் வருஷம் பர்மால இருந்து வந்த எங்கம்மா பேச்சியம்மாள் தகப்பனார் சுப்ரமணியம் சேர்ந்து Christian Mission Hospital நடைபாதைல வாளில  வச்சு  இடியாப்பம் வித்துட்டு இருந்தோம். எங்க அம்மா கைப்பக்குவத்துல தயார்ஆன இடியாப்பம், அயிரை மீன் குழம்பு எம்.ஜி.ஆர் போன்ற பெரிய தலைவர்களுக்கு போனதையும் நினைவுபடுத்தினாங்க. எங்க குடும்பம் பெருசு, நான் எங்க அம்மா கூட இருந்து வியாபாரத்த பாத்துகிட்டேன். எங்கம்மா காலத்துக்கு அப்புறம் Christian Mission Hospital எதிர்ல இருக்கிற இந்த கடைல இடியாப்ப வியபாரம் செய்ய ஆரம்பிச்சேன். கடை காலைல ஆறு மணில இருந்து பத்து மணி வரை இருக்கும், சாயந்திரம் நாலுக்கு ஆரம்பிச்சு  இரவு ஒரு மணி வரை கூட கடைல இடியாப்பம் கிடைக்கும். இப்பம் ஒரு நாளைக்கு 70 கிலோ வரை அரிசிமாவு போட்டு இடியாப்பம் தயார் செய்யிறோம். எங்களுக்கு இந்த இடியாப்ப தொழில் நல்ல புகழ தந்து இருக்குது, இடியாப்பம் எங்களோட அடையாளமா இப்பம் ஆயிடுச்சு. அது தான் எங்க போனாலும் பர்மா கடைம்மான்னு கூப்பிடுறாங்கன்னு சிரிச்சுகிட்டே தேவிகா சொன்னங்க.

அப்படியே பேச்சு கொடுத்துட்டு இடியாப்பத்தின் விலையே கேட்டேன், ஒரு இடியாப்பம் ஏழு ரூபாய்ன்னு பதில் வந்தது. மூணு இடியாப்பத்த வைக்க சொன்னேன். அதுகூட காய்கறி குழம்பு, சீனி, தேங்காய் பால் வச்சு தட்ட கைல கொடுத்தாங்க. சேர்,டேபிள் எதுவும் வெளில இல்லை, கைல வச்சு தான் சாப்பிடணும்,இருக்கட்டுமே ஸ்பெஷல் ஆச்சே. சரி எல்லாம் கலந்து சாப்பிட்டால் பதார்த்தங்களின் சுவை தெரியாதுன்னு தனித்தனியா ஒவ்வொன்னையும் ருசிக்க ஆரம்பிச்சேன். முதல்ல இடியாப்பம், மூணு பங்கு பச்சரிசி ஒரு பங்கு புழுங்கல் அரிசி என்ற அளவு தான் இடியாப்பம் இவ்வளவு வெள்ளை நிறத்துல மென்மையா இருக்குறதுக்கு காரணமாம். இந்த கடைல வேலைப்பாக்குறவங்க பல வருஷமா இருக்கிறதும் இங்கு கிடைக்கிற இடியாப்பம் தரமாகவும் சுவையாகவும் இருப்பதுக்கு இன்னொரு காரணம் ஆக கூட இருக்கலாம். அடுத்தது எனது விரல் வந்து காய்கறி குழம்ப தொட்டது, வழக்கமா காய்கறி குழம்புன்னா பொதுவா எல்லா காய்களையும் வெட்டி போட்டு தேங்காய் சேர்த்து வைப்பாங்க.  

ஆனா இதுல கத்திரிக்காய், தக்காளி,பூண்டு சேர்த்து வதக்கி அரைச்சு தாளிச்சு வச்சுருந்தாங்க. இது இடியாப்பத்துக்கு தொட்டுக்கிட புதுமையா தான் இருந்தது. ஆனா எனக்கு இதுல தக்காளியின் சுவை கொஞ்சம் ஜோரா தெரிஞ்சது. இடியாப்பம் கூட தேங்காய் பால் ஊத்தி சாப்பிட்ட அது தனிச்சுவை தான், இவங்க தர்ற தேங்காய் பால்ல கிராம்பு, ஏலக்காய் வாசனை லேசா தெரிஞ்சது. எனக்கு  பிடிச்ச இடியப்பத்த இவ்வளவு ருசியா  சாப்பிட்ட தீர்ப்த்தில பார்சல் வாங்குற கூட்டத்துல இருந்து  நவுண்டு வந்து கைய அலம்பினேன்.    

இரண்டு இடியாப்பம் பர்சலை தேவிகம்மாட்ட வாங்கிட்டு, பர்மா இடியப்பம் கடைய விட்டு நகரும் போது இடியாப்பத்தோட சுவை மட்டும் இல்ல தேவிகாம்மா அடிக்கடி சொன்ன உழைப்பு என்ற சொல்லும் மனசுல நின்னுச்சு. நடைபாதைல தொடங்கிய இந்த இடியாப்ப வியாபாரம் இன்று மதுரைல பிரபலமான இடியாப்ப கடையாகவும் வியாபாரமாகவும் வளர்ந்ததுக்கு காரணம் இவங்களோட உழைப்புத் தான். 

மதுரைக்கு வந்திங்கன்னா ஒரு எட்டு இந்த பக்கம் வந்து சாப்பிட்டு பாருங்க !!! 

பர்மா இடியாப்பம்  கடை தொடர்பு எண்: 9944385873, 9843181817


Monday, June 22, 2015

Parotta Recipe

S.NO
INGREDIENTS
QUANTITY
1
Maida
500g
2
Salt
25g
4
Refined Oil
75ml
5
Water
300ml
6
Sugar
15g

METHOD OF PREPARATION

1.       Add salt, sugar and water to Naga Maida. Knead well till it becomes pliable dough.

2.   Prepare even sized pedas from the dough. Apply oil and cover the pedas with wet cloth for 20 minutes.

3.     Use oil to roll out the pedas as thin as possible with roller. Hold two edges of the spread and swirl it tightly.

4.     Flatten and Cook the Parotta in hot tawa. Drizzle oil whenever it is needed.


5.       Serve the Parotta with your favourites.